
இந்தியாவில் நிலவி வரும் அசாதாரண சூழலை விமர்சனம் செய்து முகநூலில் பதிவிட்ட நெல்லை மாவட்டம் மேலக்கரையை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் முருகன் கண்ணா என்பவர் மீது தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதுடன் உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பியதாக இரண்டு பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர். சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணிக்க நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.