நெல்லை : 41வது வார்டு புறக்கணிப்பா? ஆணையரை கண்டித்து நோட்டீஸ் ஒட்டிய கவுன்சிலர் சங்கீதா

nellai-councilor-sangeetha-posts-notice-condemning-the-commissioner

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட 41வது வார்டு பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல், அப்படியே கிடக்கின்றன. குப்பை அள்ளும் வண்டியும் பழுதாகி நிற்கிறது. இதனால், மாநகராட்சி ஆணையரை கண்டித்து 41வது வார்டு கவுன்சிலர் சங்கீதா ராஜாசங்கர் நோட்டீஸ் ஒன்றை அடித்து ஒட்டியுள்ளார். அதில்,24 மணி நேரமும் குடிநீர் கொடுப்பதாக கூறி 28 கோடியை வீணாக்கதே என்று உண்மையை எடுத்துரைத்ததால், திட்டமிட்டு தொடர்ந்து தன்னையும் தனது வார்டையும் ஆணையர் பழிவாங்குவதாக கூறியுள்ளார். நகரமைப்பு குழு அமைப்பு தலைவராக தான் அனுப்பும் பைல்களையும் மையெழுத்து போடாமல் கிடப்பில் போடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. வார்டு சார்ந்த எனது கோரிக்கைகளுக்கு ஆணையாராக செவி சாய்ப்பதில்லை என்றும் அந்த நோட்டீசில் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.