வள்ளியூர் : செட்டிகுளம் அருகே கபடி போட்டியில் கூடன்குளம் அணிக்கு முதல் பரிசு

Valliyur-First-prize-for-Koodankulam-team-in-Kabaddi-tournament-near-Chettikulam

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் செட்டிகுளம் அருகே உள்ளஸ்ரீரங்கநாராயணபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு எஸ்ஆர்என்புரம் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து 5ம் ஆண்டாக மின்னொளி கபடி போட்டி நடத்தப்பட்டது. திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக பொருளாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. சௌந்தர்ராஜன் போட்டியை துவக்கி வைத்தார். இந்த போட்டியில் கூடன்குளம் அணிக்கு முதல் பரிசும் சிதம்பராபுரம் அணிக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது. பரிசளிப்பு விழாவில் வள்ளியூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி.பால்துரை, திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் சுதர்சன், வள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன், வள்ளியூர் தெற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ராஜ்குமார், வள்ளியூர் தெற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சங்கிலி முருகன், செட்டிகுளம் பஞ்சாயத்து துணைத் தலைவர் . ஜெகன், திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை தலைவர் அஜித் குமார், செட்டிகுளம் கிளைக்கழகச்செயலாளர் சுயம்புத்துரை, பாலகிருஷ்ணன், பொன் கிருஷ்ணன்,ரவி, மற்றும் எஸ்ஆர்என் புரம் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.