இடையன்குடி: மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வள்ளியூர் லாக்டவுன் அணி சாம்பியன்

Idayangudi-Valliyur-Lockdown-team-is-the-champion-in-the-district-cricket-tournament

நெல்லை மாவட்டம் இடையன் குடியில் கால்டுவெல் நினைவு கழகம் மற்றும் பிஷப் கால்டுவெல் கிரிக்கெட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி கால்டுவெல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் வள்ளியூர் லாக்டவுன் கிரிக்கெட் அணி முதல் பரிசும்,இடையன்குடி பிஷப் கால்டுவெல் கிரிக்கெட் கிளப் அணி இரண்டாம் பரிசும் காரி கோவில் 11 ஸ்டார் அணி மூன்றாம் பரிசும் பெற்றனள. உடன்குடி கிரிக்கெட் கிளப் அணி நான்காம் பரிசும் ஜாலி பாய்ஸ் அணி ஐந்தாம் பரிசும் பெற்றன. முதல் பரிசாக ரூ 20 ஆயிரத்தை நெல்லை மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் வழங்கினார். இரண்டாம் பரிசாக 15 ஆயிரத்தை அற்புதம் டிரேடர்ஸ் குமார் வழங்கினார். மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரத்தை கால்டுவெல் நினைவு கழகம் வழங்கியது. நான்காம் பரிசாக ரூ.7 ஆயிரத்தை முதுமொத்தன்மொழி பஞ்சாயத்து தலைவர் ஆனந்தகுமாரும் ஐந்தாம் பரிசாக ரூ.5 ஆயிரத்தை இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர் ஆகியோர் வழங்கினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன் மற்றும் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ஆகியோர்வழங்கினர்.பரிசு வழங்கும் விழா இடையன்குடி பஞ்சாயத்து தலைவர் ஜேகர் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராயர் கால்டுவெல் நினைவு கழக நிர்வாகிகள் சி.ஜேகர், ஜெயக்குமார், ஹெர்பர்ட், லிவிங்ஸ்டன், சுகிர்தராஜ், ராஜேந்திரன்,அனனியா பவுல், குணசிங் ஆல்பர்ட், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.