
நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள பட்டன்கல்லூர் பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை சுமார் 65 மதிக்கத்தக்க முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்து கிடந்தவர் யார் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. உடல் நல குறைவு காரணமாக இருந்தாரா ? வேறு காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.