நீட் நுழைவுத் தேர்வில் பாளை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை

students-of-palai-pushpalatha-vidya-mandir-school-achieve-success-in-neet-entrance-exam

தேசிய தேர்வுகள் முகமை நடத்திய நீட் நுழைவுத் தேர்வில் பாளை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா முழுவதும் 22 இலட்சம் மாணவர்கள் எழுதிய இத்தேர்வில் மாணவர் சூரிய நாராயணன் 720 க்கு 665 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 27-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாணவர் சூரிய நாராயணன் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 495/500 மதிப்பெண்கள் பெற்றதும், ஜேஇஇ முதன்மை மற்றும் அட்வான்ஸ் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மாணவர் சூரிய நாராயணன் மழலையர் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார்

மாணவர் ப்ரணவ் 633 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 191 வது இடத்தையும், மாணவர் அவனிஷ் பிரபாகர் 608 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 922 வது இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சாதனை பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன், முதன்மை முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.