முருக பக்தர்கள் மாநாட்டில் “இந்து அறநிலையத்துறை அரசு கை விட்டுவிட வேண்டும்” என்ற தீர்மானத்திற்கு தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்தத் தீர்மானம் நடைமுறைப்பத்தப்படாது. சுதந்திரம் கிடைத்த பிறகும், 10% உயர் சாதி இந்துக்களை தவிர மற்றவர்கள் இந்து ஆலயங்களுக்கு செல்ல முடியாத அவல நிலை இருந்தது. அந்த சமயத்தில் அரசு தலையிட்டு, சமத்துவத்தைக் கொண்டு வந்தது.
அனைவரும் ஆலய வழிபாட்டிற்குச் செல்லும் உரிமையை பெற்றதால், இன்று 90% இந்துக்கள் தங்கள் சுயமரியாதையை உணர்ந்து வாழ்கிறார்கள். இன்று இந்து அறநிலையத்துறையை மீண்டும் 10% உயர் சாதியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஆசை அவர்களிடம் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் அது நடக்காது. அறநிலையத்துறை, அனைத்து இந்துக்களுக்குமானது. தொடர்ந்து அரசின் கையில்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.










