திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர். மனுக்கள் மீதான நடவடிக்கையும் உடனடியாக எடுக்க துரிதப்படுத்தப்பட்டுள்ளது. முகாமில் துணை மேயர் ராஜூ, உதவி ஆணையர் ஜான்சன் தேவசகாயம், புரந்திரதாஜ், உதவி செயற்பொறியாளர்கள் தங்கபாண்டியன், அலெக்ஸாண்டர், ரவி , நிர்வாக அலுவலர் காசி விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.










