நெல்லையில் இன்று பரிதாபம்: ஆயுதப்படை பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை

tragic-incident-today-in-nellai-armed-force-woman-police-officer-commits-suicide

நெல்லை மாநகர ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் முத்தரசி (வயது 43). இவர் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு காவல் பணியில் சேர்ந்து தற்போது மாநகர ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். இவரது கணவர் பாலகணேஷ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முத்தரசி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

தொடர்ந்து, சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய முத்தரசி இன்று (அக் 31) ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முத்தரசியின் சகோதரி அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டன.ர இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்தரசியின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.