நெல்லை சிந்து பூந்துறையில் திடீரென்று கோஷம் போட்ட பாமக தலைவர் அன்புமணி: வழக்கு பதிந்த காவல்துறை

PMK-leader-Anbumani-suddenly-protest-in-Nellai-Police-register-case

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த அக்டோபர் 7ம் தேதி நெல்லை வந்தார். பின்னர்,சிந்து பூந்துறை பகுதியில் தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலக்கும் இடத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் கட்சியினரை திரட்டி அனுமதியின்றி தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி கோஷம் எழுப்பி திடீரென ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ஈடுபட்டார்.

இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு பிறகு அன்புமணி ஆர்ப்பாட்டத்தை நடத்திய பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். காவல்துறையில் முறையாக அனுமதி பெறாமல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நெல்லை ஜங்ஷன் காவல்துறையினர் பாமக தலைவர் அன்புமணி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். அவருக்கு, சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

READ MORE ABOUT :