மனைவியை கொன்று ஷார்ஜாவில் புதைத்துவிட்டு கேரளா வந்த கணவன்

மனைவியை கொன்று புதைத்துவிட்டு கேரளா வந்த கணவன்

by Suresh, Apr 28, 2018, 07:59 AM IST

மனைவியை கொன்று உடலை அமீரகம் ஷார்ஜாவில் வீட்டினுள் புதைத்துவிட்டு கேரளாவுக்கு வந்து விட்ட கணவரை சர்வதேச போலீஸ் தேடி வருகிறது.

ஷார்ஜாவில் வசித்து வந்த பெண்ணின் சகோதரர் இந்தியாவில் இருக்கிறார். அவர் தினமும் தனது சகோதரியுடம் தொலைபேசியில் பேசுவது வழக்கம். சில நாட்களாக சகோதரி தொலைபேசி அழைப்பினை எடுக்காததால், இந்தியாவிலிருந்து ஷார்ஜாவுக்கு சகோதரியை பார்ப்பதற்காக வந்தார்.

அவரது வீடு பூட்டியிருந்ததுடன், வீட்டின் முன் 'வாடகைக்கு' என்ற போர்டும் தொங்க விடப்பட்டிருந்தது. தன் சகோதரியை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தரும்படியும் அவர் ஷார்ஜா காவல்துறையிடம் ஏப்ரல் 9-ம் தேதி புகார் கொடுத்தார்.

குறிப்பிட்ட வீட்டுக்கு வந்த காவல்துறையினர், வீட்டினுள் ஓரிடத்தில் தள ஓடுகள் இல்லாமல் இருப்பதை கண்டு சந்தேகம் கொண்டனர். மோப்ப நாயின் உதவியோடு தேடியதில், தரையினுள் புதைக்கப்பட்டிருந்த 36 வயது பெண்ணின் உடலை கண்டுபிடித்தனர். அவரது சகோதரர் உடலை அடையாளம் காட்டினார்.

பெண்ணின் உடல், உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டினுள் இருந்த கணவரின் கண்விழித்திரை பதிவுகள் மற்றும் கைரேகைகளை கொண்டு காவல்துறையினர் கணவரை அடையாளம் கண்டனர்.

கொல்லப்பட்ட பெண்ணின் கணவருக்கு, இன்னொரு மனைவி இருப்பதாக தெரிகிறது. அந்த மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் இந்தியாவுக்கு அனுப்பி விட்டு, இப்பெண்ணை கொலை செய்து விட்டு, இந்தியாவில் கேரளாவுக்கு சென்றிருக்கிறார் என்று காவல்துறையினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட கணவரை கைது செய்ய சர்வதேச காவல்துறை பிடியாணை பிறப்பித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மனைவியை கொன்று ஷார்ஜாவில் புதைத்துவிட்டு கேரளா வந்த கணவன் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை