தென் தமிழகத்தின் புகழ்பெற்ற பாளையங்கோட்டை தசரா திருவிழா இன்று கால்நாட்டு வைபவத்துடன் தொடங்கியது.

பாளையங்கோட்டையில் பிரசித்திபெற்ற பதினோரு அம்மன் கோயில்களிலும் ஒரே நேரத்தில் கால்நாட்டு நடத்தப்பட்டு தசரா பூஜைகள் தொடங்கப்பட்டன. எனினும் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாகப் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. Read More