மருத்துவமனை லிப்ட் திடீரென விழுந்தது.. முன்னாள் முதல்வர் கமல்நாத் தப்பினார்..

இந்தூர் மருத்துவமனை ஒன்றில் லிப்ட் திடீரென 10 அடிக்கு டமார் என விழுந்தது. இதில் பயணம் செய்த முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உயிர் தப்பினர்.மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது அமைச்சராக இருந்தவர் ராமேஸ்வர் படேல். Read More


விவசாயிகளின் மரணத்திற்கு பாஜக அனுதாபம் தெரிவிக்கவில்லை.. ராகுல்காந்தி பேச்சு..

விவசாயிகளின் மரணத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்.பி. கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ராகுல்காந்தி வசைபாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். Read More


கோவில் ஆச்சாரத்தை மீறியதால் பெரும் சோதனை வெள்ளியில் ஹெலிகாப்டர் சமர்ப்பித்த அரசியல் தலைவர்

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைலரா லிங்கேஸ்வரர் கோவில் ஆச்சாரத்தை மீறியதால் தான் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் சோதனை ஏற்பட்டதாக கூறி அந்தக் கோவிலுக்கு வெள்ளியில் ஹெலிகாப்டர் செய்து அதை காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார் Read More


கொரோனா பாதிக்கப்பட்ட அகமது படேல் மரணம்.. மோடி, ராகுல்காந்தி இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அகமது படேல், காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவர். கடந்த அக்டோபர் 1-ம் தேதியன்று அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். Read More


பலாத்காரம் செய்யப்பட்டால் மானமுள்ள பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை.

பலாத்காரம் செய்யப்பட்டால் மானமுள்ள பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More


இன்று மதியம் 2 மணிக்கு பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது..

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த திரு.பிரணாப் முகர்ஜி, சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் மரணம் அடைந்தார் Read More


நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா.. ப.சிதம்பரம் பங்கேற்பு

வெங்காய விலை உயர்வை தடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More


சோனியா குடும்பத்தினருக்கு பாதுகாப்பு விலக்கப்படவில்லை.. மக்களவையில் அமித்ஷா விளக்கம்

காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்தினருக்கு பாதுகாப்பு விலக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். Read More


பிரதமர் மோடியுடன் பவார் சந்திப்பு.. மகாராஷ்டிராவில் கூட்டணி?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவது குறித்து விரைவில் முடிவு தெரியலாம். Read More


ஆட்சியமைப்பது பற்றி சோனியாவிடம் பேசவில்லை.. சரத்பவார் பேட்டி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் நேற்று(நவ.18) சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை என்று மழுப்பினார். Read More