நாற்காலிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினி நடிப்பில் தனது அடுத்த படத்தின் பெயர் குறித்து பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாஸ் ஹிட் கொடுத்த படம் சர்க்கார். இந்த படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்ததை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. அந்த படத்திற்கு நாற்காலி என்று பெயர் வைத்துள்ளதாகவும் அதற்கான போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி வைத்து இயக்கும் அடுத்த படத்தின் பெயர் நாற்காலி என்று உறுதியாகவே பேசப்பட்டு வந்தது. இதனால், கடுப்பான ஏ.ஆர்.முருகதாஸ் இதுகுறித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

அதில், தான் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் நாற்காலி இல்லை என்றும் தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.

More News >>