இளையராஜா 75 நிகழ்ச்சி: ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த விஷால்

நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் இளையராஜா 75 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும்படி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தார்.

இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் பிப்ரவரி மாதம் 2ம் மற்றும் 3ம் தேதிகளில் பிரம்மாண்ட திரை கொண்டாட்டம் நிறைந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்திகழ்ச்சி இரு தினங்களிலும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியின் முதல் நாளான்று இசைஞானியின் பாடலுக்கு முன்னிணி திரை நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகளும், தொடர்ந்து 2ம் நாளில் இசைஞானி இளையராஜா மற்றும் ஆர்கெஸ்ட்ரா குழு சார்பில் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் பொது மக்கள் பங்கேற்க சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக டிக்கெட் புக்கிங்கும் நடைபெற்று வருகிறது.இதற்கிடையே, நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும்படி திரை நட்சத்திரங்களுக்கு சங்கம் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் மற்றும் நடிகர் மனோபாலா ஆகியோர் இன்று ரஜினியின் வீட்டிற்கு நேரடியாக சென்று இளையராஜா 75 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

More News >>