தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கைது- விடிய விடிய மக்கள் போராட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து நேற்று பிற்பகல் முதல் நள்ளிரவை தாண்டியும் கொட்டும் பனியிலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். தூத்துக்குடியில் நேற்று பிற்பகல் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷை சிலர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர்தான் சுரேஷை போலீசார் கைது செய்தது தெரியவந்தது. போலீசாரின் இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து பொதுமக்கள் நேற்று பிற்பகல் தொடங்கி நள்ளிரவைத் தாண்டியும் விடிய விடிய கொட்டும் பனியிலும் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

More News >>