மமதா ஒருங்கிணைக்கும் எதிர்க்கட்சிகளின் பேரணி- இன்று கொல்கத்தா புறப்படுகிறார் ஸ்டாலின்

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஒருங்கிணைக்கும் எதிர்க்கட்சிகளின் நாளைய பேரணியில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொல்கத்தா புறப்பட்டுச் செல்கிறார்.

தேசிய அளவில் பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஏற்பாட்டில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பாஜக அல்லாத பெரும்பாலான கட்சிகள் பங்கேற்க உள்ளன. இப்பேரணியில் பங்கேற்போர் பட்டியலை மமதா வெளியிடும் போது திமுக தலைவர் ஸ்டாலின் பெயர் இடம்பெறாமல் இருந்தது சர்ச்சையானது.

பின்னர் திமுக தரப்பில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஸ்டாலின் கொல்கத்தா புறப்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More News >>