சபரிமலை விவகாரம்: பா.ஜ.க.வின் காலவரையற்ற உண்ணாவிரதம் வாபஸாகிறது!

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து பா.ஜ.க.வினர் நடத்தி வந்த தொடர் உண்ணாவிரதம் நாளையுடன் வாபஸாகிறது.

திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் எதிரே கடந்த 48 நாட்களாக நடந்து வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநில பா.ஜ.க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், பத்மநாபன், ஷோபா சுரேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வந்தனர். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இரு மாதங்களாக திறக்கப்பட்டிருந்த கோயில் நடை நாளை சாத்தப்படுகிறது.

எனவே தொடர் உண்ணாவிரதப் போராட்டாத்தையும் நாளையுடன் முடித்துக் கொள்ள பா.ஜ.க.வினர் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து நாளை மறுதினம் 2 லட்சம் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்கும் நாம ஜெபம் நிகழ்ச்சியையும் பா.ஜ.க. நடத்துகிறது.

 

More News >>