கமல்ஹாசனே இன்னும் மின்னஞ்சல் அனுப்பவில்லை- கடம்பூர் ராஜு

திரைத்துறையில் கூட லஞ்சம் கொடுத்தால்தான் காரியமாகிறது என குற்றஞ்சாட்டிய கமல்ஹாசனே இன்னும் மின்னஞ்சல் அனுப்பவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் பெருத்து விட்டது என நடிகர் கமலஹாசன் குற்றஞ்சாட்டியிருந்தார். கடிதம் வழியாக புகார் அனுப்பாதீர்கள். இது டிஜிட்டல் யூகம். எனவே மெயில் வழியாக புகார்களை பதிவு செய்யுங்கள்' என கமல்ஹாசன் கோரியிருந்தார். இந்தநிலையில்தான் கோரிக்கை விடுத்த கமல்ஹாசனே இன்னும் புகார் மெயில் அனுப்பவில்லை என கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

புகார் கூறிய கமல்ஹாசன் அனுப்பாத பட்சத்தில் பொதுமக்கள் எப்படி அனுப்புவார்கள் என்று தெரியவில்லை. இப்போதைய சூழலில் தமிழகத்துக்கு நல்லத் தலைமை இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதனால், அரசியல்வாதிகளும் சில நடிகர் நடிகைகளும் கருத்து சொல்கிறார்கள்.

 

More News >>