சசிகலா தயவில் கோடீஸ்வரரான 152 மன்னார்குடி குடும்பங்கள்.. பட்டியல் போடும் அமைச்சர்கள்!

தமிழக அமைச்சர்களில் சிலர் தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருப்பதை அதிர்ச்சியோடு கவனித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவர்களை சமாதானப்படுத்த தங்கமணியைக் களமிறக்கிவிட்டிருக்கிறார்.

அதிருப்தி அமைச்சர்களை வழிக்குக் கொண்டு வரும் வேலையை தங்கமணி அண்ட் கோ செய்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது பேசிய அமைச்சர் ஒருவர், 'எங்களையெல்லாம் சித்ரவதைப்படுத்தித்தான் சசிகலா குடும்பம் பிழைத்தது. திருட்டு கேசட்டைக் கொண்டு வந்து ஜெயலலிதாவிடம் ஒட்டிக் கொண்டவர் சசிகலா.

அப்படிப்பட்டவர் எங்களை அடக்கும் வேலையைச் சிறப்பாகச் செய்தார். அவரால் மன்னார்குடியைச் சேர்ந்த 152 குடும்பங்கள், கோடீஸ்வரர்களாகிவிட்டனர். அத்தனையும் எங்களை அடித்துப் பிடிங்கிக் கொண்ட பணம்.

அவரது வழியில், எங்களிடமும் பணம் கொடுங்கள் எனக் கேட்டால் எங்கே போவது' என ஆதங்கப்பட்டிருக்கிறார்.

More News >>