சங்கரராமன் கொலை மட்டும் அல்ல..ஜெயேந்திரரர் மரணத்தையும் விசாரிக்க நேரிடும்... காஞ்சி சங்கர மடத்துக்கு வார்னிங்!

ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக காஞ்சி சங்கர மடத்தின் விஜயேந்திரர் செயல்பட்டு வருவதை கோபத்துடன் கவனித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

மீண்டும் பன்னீருக்கு ஆதரவாகச் செயல்படுவது நல்லதில்லை என சங்கர மடத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முதல் அமைச்சர்.

இதுதொடர்பாகப் பேசிய முதல் அமைச்சர் தரப்பினர், ஆட்சிக்குள் சங்கர மடம் தலையிடுவதை முதல்வர் விரும்பவில்லை. அதிமுகவுக்குள் குழப்பம் விளைவிக்கும் வேலையாகவே பார்க்கிறார்.

இதைப் பற்றிப் பேசியவர், இந்திரா காந்தி காலத்தோடு உங்கள் அதிகாரம் முடிந்துவிட்டது. அம்மா உங்களை எப்படி வைத்திருந்தாரோ அப்படித்தான் நானும் வைத்திருக்கிறேன். இனியும் எதாவது வேலைகள் நடப்பதாகத் தெரிந்தால் நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும்.

பழைய விவகாரங்களைத் தோண்ட வேண்டியது வரும்' எனக் கூறினாராம். பழைய விவகாரம் என அவர் கூறுவது சங்கரராமன் படுகொலை மட்டுமல்ல, சங்கராச்சாரி ஜெயேந்திரர் மரணத்தையும் சேர்த்துத்தான் என்கிறார்கள் முதல் அமைச்சருக்கு நெருங்கியவர்கள்.

More News >>