என்னது நான் திமுக அறக்கட்டளைகளில் அறங்காவலரா? நிரூபித்தால் சேடிஸ்ட் மோடி முன்னிலையில் பாஜகவில் சேருகிறேன்: உதயநிதி ஸ்டாலின் காட்டம்

தாம் திமுக அறக்கட்டளைகளில் அறங்காவலர் பொறுப்பில் இருப்பதாக யாரேனும் நிரூபித்தால் பிரதமர் மோடி முன்னிலையில் தாம் பாஜகவில் இணைய தயார் என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

திமுக அறக்கட்டளையில் அறங்காவலராக உதயநிதி ஸ்டாலின்; முரசொலி மேலாண் இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் என பதிவிட்டு இதை மறுக்கத்தான் முடியுமா? என பாஜக ஆதரவாளர்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

அதில், திமுக அறக்கட்டளைகளில் தாம் அறங்காவலர் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? அப்படி ஒருவர் நிரூபித்துவிட்டால் சேடிஸ்ட் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தாம் பாஜகவில் இணையத் தயார் என சவால்விட்டுள்ளார். உதயநிதியின் இந்த காட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

More News >>