கோடநாடு விவகாரம் : சிபிஐ விசாரணை கோரிய டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி!

கோடநாடு கொள்ளை, தொடர் கொலை மர்மம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கோடநாடு சம்பவங்கள் குறித்து தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் வெளியிட்ட ஆவணப் படத்தை மேற்கோள் காட்டி டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதே புகார் கூறப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தார்.

More News >>