மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

மதுரை திருமங்கலம் அருகே தோப்பூரில் ரூ1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு அறிவித்தது. இதில் 750 படுக்கை வசதி, 100 மருத்துவ கல்வி இடங்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் நாளை நடைபெறுகிறது.

இதற்காக மதுரை விமான நிலையத்தில் 2 மணிநேரம் வான்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இவ்விழா முடிந்ததும் அருகே நடைபெறும் பாஜக மண்டல மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

More News >>