மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளரை அறிவித்தது டிஆர்எஸ்!

மக்களவைத் தேர்தலுக்கான தனது கட்சியின் முதல் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ள ராஷ்ட்ரீய சமிதி மக்களவைத் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுகிறது. தற்போது உள்ள எம்.பி.க்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும் என்று தெலுங்கானா முதல்வரும் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் முதல் வேட்பாளராக கரீம்நகர் தொகுதிக்கு தற்போதைய எம்.பி.யான வினோத்குமார் பெயரை அக்கட்சியின் செயல் தலைவரும், சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ் அறவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் 43% மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றோம்.இத்தேர்தலிலும் வெற்றி தொடரும் என்றார்.

More News >>