அடேங்கப்பா... எவ்ளோ பெரிய நம்பிக்கை... பாஜக கூட்டணி தமிழகத்தில் 30 தொகுதிகளில் வெல்லுமாம்... பொன். ராதாகிருஷ்ணன்

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 30 தொகுதிகளில் வெல்லும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரை அருகே மண்டேலா நகரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

இதனைத் தொடர்ந்து பாஜக மாநாட்டிலும் மோடி பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார். இந்த இடங்களை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.

 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தமிழகத்துக்கு மட்டும் அல்ல; இந்தியாவுக்கே திருப்புமுனையாகும் என்றார்.மேலும் லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் 30 தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

More News >>