பிரதமர் மோடி மதுரை வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்திற்கு திரண்ட மதிமுகவினர்!

பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்திற்கு கொடிகளுடன் மதிமுகவினர் திரண்டுள்ளனர்.

வைகோ தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ள பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் மதிமுகவினர் கட்சிக் கொடிகளுடன் திரண்டுள்ளனர். அவர்களைச் சுற்றிலும் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கருப்புக்கொடி காட்டினால் வைகோ மற்றும் மதிமுகவினர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல் நிலவுகிறது.

More News >>