சிறை செல்ல 1000 பேர் தயார்... ஆளுநர் வாய்ப்பளிக்கமாட்டார்.. அற்புதம்மாள் நம்பிக்கை!

பேரறிவாளன் உள்ளிட்ட எழு தமிழர் விடுதலையானது ஆளுநர் கையொப்பம் ஒன்றினால் 5 மாத காலமால தாமதமாகிவருகிறது...

ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்வை அற்புதம்மாள் நிகழ்த்தி வருகிறார்...கோவையில் கடந்த வியாழனன்று தொடங்கிய மக்கள் சந்திப்பு நிகழ்வு தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்ததாக அற்புதம்மாள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் 7 பேர் சிறையிலிருந்து வெளிவரும் வரை தாங்கள் சிறையில் அடைபட தயார் என கூறியதில் கண்ணீர் விட்டு நன்றி தெரிவித்தார் அற்புதம்மாள்.. தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் தொடர்பு கொண்டு தன்னையும் அதில் இணைத்துக்கொள்ள தயார் என அற்புதம்மாளிடம் கூறி வருகின்றனர்.

இதனிடையே கோவையில் சிறை செல்ல தயார் என அறிவித்தவர்களின் பெயர்களை நேற்று ஈரோடு செய்தியாளர் சந்திப்பில் வாசித்தார்.. இந்த எண்ணிக்கை 1000 த்தை தாண்டும் என்றாலும் அதற்கான தேவையை ஆளுநர் உருவாக்க மாட்டார் என நம்பிக்கையோடு தெரிவித்தார்...

-அருள் திலீபன்

More News >>