இந்தோனேசிய ஓபன் பேட்மின்டன் - சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா!

இந்தோனேசிய ஓபன் பட்டத்தை வென்றார் இந்தியாவின் சாய்னா நேவல்.

இறுதிப் போட்டியில் எதிர்த்து ஆடிய உலகின் முதல் நிலை வீராங்கனை ஸ்பெயினின் கரோலினா மார்டின் காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியில் விலகியதால் சாம்பியன் பட்டத்தை சாய்னா நேவல் எளிதில் வென்றார். ஜகார்தாவில் நடந்த இறுதிப் போட்டியில் முதல் செட் ஆட்டத்தில் 9-3, என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த கரோலினுக்கு குதிகாலில் காயம் பட்டது.

தொடர்ந்து ஆட முயன்றும் ஆட முடியாமல் கரோலினா வெளியேறினார். இதனால் சாய்னா நேவால் வென்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டத்தை எளிதில் வென்றார். இந்தோனேசிய சாம்பியன் பட்டத்தை சாய்னா நேவல் வெல்வது இதுவே முதல் முறை.

More News >>