இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூஸி. பேட்டிங் தேர்வு

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் டோணி, விஜய் சங்கருக்கு பதில் தினேஷ் கார்த்திக் மற்றும் பாண்ட்யா சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. மொத்தம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

இதுவரை நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மவுண்ட் மாங்கானுவில் இன்று 3-வது ஒருநாள் போட்டி தொடங்கியது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் டோணி, விஜய் சங்கருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் மற்றும் பாண்ட்யா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து அணியில் காலின் டி கிராண்ட்ஹோமுக்குப் பதில் சான்ட்னர் இணைந்துள்ளார்.

இன்று டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது,

More News >>