இலங்கை கடற்படையால் மீண்டும் 4 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளன.

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் துயரம் தொடருகிறது. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க முடியாமல் வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கின்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.

இந்நிலையில் இன்று காலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More News >>