நாடாளுமன்ற கடைசி கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது - நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்!

விரைவில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், கடைசி கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்துகிறார்.

நாளை இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் தாக்கல் செய்கிறார். தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் என்றாலும் ஒரு சில சலுகைகள், கவர்ச்சித் திட்டங்களும் இதில் இடம் பெறலாம் எனத் தெரிகிறது.

வரும் பிப்ரவரி 13-ந் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் ரபேல் உள்ளிட்ட பல்வேறு விவகாரத்தில் விவாதம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>