4 தலைமுறை வாசகர்களின் குரலாய் இருந்த தமிழ்நேசன் மூடல் - மலேசிய தமிழர்கள் சோகம்!

மலேசியாவில் 95 ஆண்டு காலம் வெளிவந்த தமிழ் நேசன் தமிழ் நாளிதழ் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது மலேசியத் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழ்நேசன் தொடர்ந்து வெளிவர வேண்டும் என ஒட்டு மொத்த மலேசிய வாழ் தமிழர்கள் கண்ணீர் விடாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மலேசியா வாழ் தமிழர்களுக்கு என்றே வெளியாகி சக்கை போடு போட்டு வந்த நாளிதழ் தான் தமிழ் நேசன். தமிழ், தமிழர்கள், தமிழர் நலன் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு,95 ஆண்டு காலம்,4 தலைமுறை வாசகர்கள் என வெளிவந்து கொண்டிருந்த தமிழ் நேசன் இன்றுடன் மூடப்படுகிறது என்ற செய்தியுடன் கடைசி நாளில் பிரசுரமானது.

தமிழ்நேசன் மூடப்படுகிறதா?நிஜமாகவா? என நம்ப முடியாத கேள்விகளுட ன்போட்டி போட்டு மலேசிய தமிழர்கள் தமிழ் நேசனை வாங்கியதில் சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்து விட்டது.

60 ஆண்டு கால வாசக கன் .... 50 காலமாக தமிழ் நேசனைப் படிக்கிறேன் என்று வேதனையுடன் பழைய நினைவுகளில் மூழ்கிய மலேசிய தமிழர்கள், எங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக, தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்த தமிழ்நேசன் மூடப்படவே கூடாது என ஓட்டு மொத்தமாய் குரல் கொடுத்துள்ளனர்

More News >>