கள்ளக் காதலில் சிக்கிய கள்ளக் காதல் பத்திரிகை அதிபர்... பெரிய இடத்து அழகியுடன் உல்லாசமாக இருக்கப் போய் ரூ1 கோடியை பறிகொடுத்த பரிதாபம்!

தமிழகத்தின் பிரபலமான, கள்ளக் காதலை விலாவாரியாக ரசனை சொட்ட விவரிக்கும் பத்திரிகையின் அதிபருக்கும், சென்னையின் பிரபலமான மருத்துவ பல்கலைக் கழகம் மற்றும் மருத்துவமனை வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அழகிய அம்மணிக்கும் நீண்ட காலமாக கள்ளக்காதல். இருவரும் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை சொகுசு ரிசார்ட்டில் அடிக்கடி ரகசியமாக சந்திப்பு நடத்துவது வழக்கமாம்.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இருவரும் ஈசிஆர் சொகுசு ரிசார்ட்டில் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்கள் இருவரின் ரகசிய சந்திப்பை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் நோட்டமிட்டே வந்துள்ளது.

இந்த கள்ளக்காதல் ஜோடியின் சந்திப்பின் போது மர்மக்கும்பல் ரிசார்ட்டுக்குள் அதிரடியாக நுழைந்து ஊழியர்களை சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது. பின்னர் பத்திரிகை அதிபரின் சொகுசுக்காரை அடித்து நொறுக்கி காரில் இருந்த ரூ.1 கோடி, பணம், லேப்டாப் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை 'லபக்' செய்து ஓடிவிட்டதாம்.

போலீசுக்குப் போனால் கள்ளக்காதல் விவகாரம் அம்பலத்துக்கு வந்து தமிழ்நாடே சிரித்துவிடுமே என்று நடுநடுங்கிப் போய் விட்டார்களாம் பெரிய இடத்துப் பிள்ளைகள். பின்னர் ஒரு வழியாக யோசித்து, யோசித்து தங்களுக்கு வேண்டிய பெரிய காக்கியிடம் விவகாரத்தை ரகசியமாக விசாரிக்கும் படி வேண்டினராம்.

இப்போது சம்பந்தப்பட்ட ரிசார்ட்டை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ரவுடிகளை அள்ளிவந்து கடந்த மூன்று நாட்களாக பின்னி எடுக்கிறதாம் போலீஸ் . இருந்தாலும் உண்மை வெளிவராததால் சம்பந்தப்பட்ட ரிசார்ட் வாட்ச்மேன், ஊழியர்கள் சிலர் மீதும் சந்தேகம் கொண்டு தக்க கவனிப்புடன் விசாரிக்கிறதாம் போலீஸ் .

இந்தப் பெரிய இடத்து கள்ளக்காதல் விவகாரமும், ஒரு கோடி பணம் பறிபோன விவகாரமும் அரசல் புரசலாக வெளியே கசிய, ரொம்பவே புலம்பி நொந்து போய்க் கிடக்கிறதாம் அந்த பெரிய இடத்து ஜோடி.

More News >>