நிர்மூலம் சீதாராமனை தமிழக முதல்வராக்க மயிலாப்பூரில் ரகசிய யாகங்கள்.... முரசொலி திடுக் தகவல்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக முதல்வராக்க மயிலாப்பூரில் ரகசிய யாகங்கள் நடத்தப்படுவதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.

முரசொலி நாளிதழின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது:

தமிழகத்துக்கான பாஜகவின் புதிய அவதாரங்களில் ஒன்று நிர்மலா சீதாராமன். அதிமுகவை அடிமையாக்கி அதன் தோளில் உட்காரும்போது எல்லாரையும் விட உயரமாகத் தெரியுமாம் பாஜக. அப்போது இந்த அவதாரத்தை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் மயிலாப்பூர் மாட வீதிகளில் ரகசிய யாகங்களை நடத்திக் கொண்டிருப்பது நாடறிந்ததே.

அதனால்தான் தமிழ்நாட்டின் உள்ளாட்சித் துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய ராணுவத்துறை அமைசரிடம் கொண்டு போய் வேலு Money, தங்க Moneyகள் மும்பை போய் மனு கொடுத்தார்கள். அந்த நிர்மூல சீதாராமன் கோவையில் பேசும்போது, தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு திமுக இடையூறாக உள்ளது என்று உளறிக் கொட்டி இருக்கிறது...இப்பாடி சரமாரியாக நிர்மலா சீதாராமனை விளாசித் தள்ளியிருக்கிறது முரசொலி.

More News >>