மேற்கு வங்க விவகாரம்... மோடி அரசு மீது சிவசேனா பாய்ச்சல்- மமதாவுக்கு ஆதரவு!

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என மத்திய அரசை சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.

பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்த போதும் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது சிவசேனா. தற்போது மேற்கு வங்க மாநில அரசுடன் மத்திய அரசு சிபிஐ மூலமாக மோதி வருகிறது.

மத்திய அரசின் நிலையை கடுமையாக எதிர்க்கும் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் சிவசேனாவும் மமதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனா, மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வுகள், அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என சாடியுள்ளது.

More News >>