கள்ளக்காதலியின் கணவனை கொன்று உடலை துண்டுகளாக்கி ஆசிட் ஊற்றி கரைத்த கொடுமை58 வயது டாக்டரின் வெறிச் செயல்!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் கணவனை கொடூரமாக கொலை செய்த 58 வயது பணக்கார டாக்டர் ஒருவர், சடலத்தை துண்டு, துண்டுகளாக வெட்டி ஆசிட்டில் ஊற வைத்து கரைத்த கொடூர சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

ஹோசங்காபாத் என்ற நகரில் டாக்டராக இருப்பவர் சுனில் மந்த்ரி. 26 வயது மகன், 23 வயது மகள் உள்ளனர். பணக்கார டாக்டரான சுனில் அங்கு உயர்தர வகுப்பினர் வசிக்கும் பகுதியில் ஆடம்பர வீட்டில் வசித்து வந்தார். இவருடைய மனைவியும், பிரேந்திரா என்பவரின் மனைவியான 25 வயது பெண் ஒருவரும் வீட்டின் ஒரு பகுதியில் பெண்களுக்கான அலங்காரப் பொருள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டரின் மனைவி இறந்துவிட, இளம்பெண் மட்டும் கடையை நடத்தி வந்தார். மனைவியை இழந்த டாக்டருக்கும் இளம் பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுவிட்டது. இதனை எப்படியோ மோப்பம் பிடித்து விட்ட பெண்ணின் கணவர் பிரேந்திரா டாக்டரை எச்சரித்துள்ளான். அடிக்கடி பணம் கேட்டும் டாக்டரை மிரட்டியுள்ளான்.

இதனால் கள்ளக் காதலலுக்கு இடைஞ்சலாக உள்ள பிரேந்திராவை தீர்த்துக் கட்ட டாக்டர் திட்டம் தீட்டினார். டிரைவராக வேறு இடத்தில் பணியாற்றி வந்த பிரேந்திராவை தனது கார் டிரைவராக பணியில் அமர்த்தினார்.

டிரைவர் பணியில் சேர்ந்த முதல்நாளே பிரேந்திரா பல்வலி எனக்கூற, இது தான் சாக்கு என்று மயக்கம் வரும் மாத்திரையை டாக்டர் சுனில் கொடுத்து மயங்கச் செய்தார். பின்னர் கழுத்தை கத்தியால் அறுத்து பிரேந்திராவைக் கொன்ற டாக்டர், ரம்பம் கொண்டு உடலை 25 துண்டுகளாக்கி தயாராக வைத்திருந்த ஆசிட் ட்ரம்மில் போட்டு கரைத்துள்ளார்.

ஆனாலும் கொலை செய்த பதற்றத்தில் டாக்டர் சுனில் சட்டையில் பட்ட ரத்தக்கறையுடன் வெளியே போவதும்,வருவதுமாக இருந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசில் தெரிவிக்க கைது செய்யப்பட்டு இப்போது கம்பி எண்ணுகிறார்.

More News >>