தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே பரிசீலிக்கலாம் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கக் கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்த முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கலாம். ஏற்கனவே இரட்டை இலை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை 4 வாரத்திற்குள் முடிக்க வேண்டும். அவ்வாறு இரட்டை வழக்கு முடிக்கப்படாவிட்டால் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

4 வார காலத்திற்கு முன்னரே தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியானால் அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குள் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.    

More News >>