பாஜக தலைமையிலான கூட்டணி.. 14 தொகுதிகள் .. அடாவடி காட்டும் தேமுதிக!

லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுதீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

லோக்சபா தேர்தல் என்பதால் தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவோம். தற்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து பேசிவருகிறோம்.

மாநில கட்சிகள் சிலவற்றுடனும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நாங்கள் போட்டியிட்ட 14 லோக்சபா தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

இம்மாத இறுதியில் விஜயகாந்த் தமிழகம் திரும்புவார். அவர் தமிழகம் வந்த பின்னர் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு சுதீஷ் தெரிவித்தார்.

More News >>