திமுக- காங். அணியில் அமமுக? சசிகலாவிடம் தூதுப் படலம்- களமிறங்கிய ராகுல் தூதுவர்கள்!

மோடி எதிர்ப்பு வாக்குகளை தினகரன் பிரிப்பார் என்பதால் அவரை காங்கிரஸ் பக்கம் கொண்டு வரும் வேலைகளைச் செய்து வருகின்றனர் ராகுலுக்கு வேண்டிய நிர்வாகிகள். இந்தப் பணிக்காக முன்னாள் எம்பிக்கள் மாணிக் தாகூரும் சுதர்சன நாச்சியப்பனும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் மன்னார்குடி குடும்ப ஆட்களில் தூதுப் படலத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். தினகரனிடம் பேசுவதற்குப் பதிலாக நேரடியாக சசிகலாவிடமே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

'மோடி எதிர்ப்பு வாக்குகளை நீங்கள் பிரிப்பதால், காங்கிரஸ் அணிக்கு பெருவாரியான வெற்றி கிடைப்பது சிரமம். அமமுகவை வைத்துக் கொண்டு தென்மண்டலத்தில் உங்கள் சமுதாய வாக்குகளை மட்டுமே பெற முடியும்.

அதிலும் வெற்றிக்கான வாய்ப்புகள் என்பது அறவே இல்லை. திமுக, காங்கிரஸ் அணிக்குள் நீங்கள் வந்துவிட்டால், 5 இடங்களில் உறுதியாக அமமுக வென்றுவிடும். தேர்தலுக்குப் பிறகு உங்களுக்கான விஷயங்களைச் செய்து தருகிறோம்' என நம்பிக்கை கொடுத்துள்ளனர்.

அதிமுக,பாஜக கூட்டணி உறவு ஏற்பட்டால், சசிகலா முடிவில் மாற்றம் தென்படலாம் என்கிறார்கள் மன்னார்குடி தரப்பினர்.

- அருள் திலீபன்

 

More News >>