சக்கரபாணி மூலம் ஸ்டாலினுக்கு தூது விடும் கொங்கு ஈஸ்வரன் - விசிகவை கழற்றிவிட்டால் ஓ.கே.வாம்!

தாம் திமுக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் தயார் என ஒட்டன்சத்திரம் சக்கரபாணி எம்.எல்.ஏ. மூலம் திமுகவுக்கு தூதுவிட்டுள்ளார் கொங்கு ஈஸ்வரன்.

லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பிடிகொடுக்காமல் இருந்து வந்தார் கொங்கு ஈஸ்வரன். தற்போது அவர் திமுகவுக்கு தூதுவிட்டிருக்கிறாராம்.

ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ. சக்கரபாணி மூலமாக திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஈஸ்வரன், கொங்கு பெல்ட்டில் விடுதலை சிறுத்தைகள் இல்லாத திமுக கூட்டணி இம்முறை அமோகமாக வெற்றி பெறும்.

விடுதலை சிறுத்தைகளை கழற்றிவிட்டால் கூட்டணிக்கு நாங்கள் தயார். ஏன் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடவும் தயார் என கூறுகிறாராம் ஈஸ்வரன். சக்கரபாணியை பொறுத்தவரை கொங்கு பெல்ட்டில் அதிமுகவை எதிர்க்க ஈஸ்வரனை பயன்படுத்தலாம் என்பது கணக்கு.

ஆனால் சுப்புலட்சுமி ஜெகதீசன், முத்துசாமி போன்றவர்களோ கொங்கு ஈஸ்வரனை சேர்க்கவே கூடாது என கொடிபிடிக்கிறார்களாம்.

More News >>