பாஜகவுடன் முதலில் கூட்டணி சேரும் திவாகரன் - ஜெய் ஆனந்த்! பியூஸ் கோயல் நடத்திய பேச்சுவார்த்தை!

தினகரனின் அம முகவுக்குப் போட்டியாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். தன் கட்சியின் மாஸ்காட்ட வரும் 24-ந் தேதி மன்னார்குடியில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்த தடபுடல் ஏற்பாடுகளை செய்து வருகிறார் திவாகரன்.

அதிமுகவுடனான பாஜக கூட்டணி உறுதி என்ற தகவல்கள் வெளியாகும் வேளையில் திவாகரனும் பாஜக கூட்டணிக்கு முயற்சி செய்து வருகிறார். இன்று சென்னையில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்ததும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சும் நடத்தி விட்டு சென்றுள்ள தகவலும் வெளியாகி உள்ளது.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் போது திவாகரனும் கூட்டா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. ஒரு வேளை மன்னார்குடியில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தி தன் செல்வாக்கை நிருபித்து பின்னர் அதிமுகவில் திவாகரன் ஐக்கிய மாவார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

 

More News >>