Recounting minister - ப.சிதம்பரத்தை போட்டுத் தாக்கிய பிரதமர் மோடி!

திருப்பூர் பாஜக பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தை கேலியும், கிண்டலுமாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

திருப்பூரில் பிரம்மாண்ட பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். மோடி அவ்வளவுதான். செல்வாக்கு இழந்துவிட்டார். தோற்றுப் போய் விடுவார் என்று கூறும் காங்கிரஸ் மகா கூட்டணியை துணைக்கு அழைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

காமராஜர் போன்று தாம் ஊழலற்ற ஆட்சி நடத்துவதாக குறிப்பிட்ட மோடி, காங். மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை, Recounting minister, உலகிலேயே தாம் ஒருவர் தான் ஒருவர்தான் பெரும் அறிவாளி என்று எண்ணம் கொண்டவர் என்று பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார்.

More News >>