மீண்டும் மீண்டும்... குமுதம் ரிப்போர்ட்டருக்கு எதிராக குஷ்பு கொலவெறி ட்வீட்டுகள்

குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தம்மை பற்றி தவறாக மீண்டும் எழுதியதால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கொந்தளித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் குஷ்புவை இணைத்து ஒரு கட்டுரை வெளியிட்டது குமுதம் ரிப்போர்ட்டர். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் குமுதம் ரிப்போர்ட்டருக்கு எதிராக குஷ்பு கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், அன்று அப்பாவுக்கும் (கருணாநிதி) மகளுக்குமான (குஷ்பு) உறவை கொச்சைப்படுத்தியது குமுதம் ரிப்போர்ட்டர்.

அதன் பின்னர் 1000 முறை மன்னிப்பு கேட்டது குமுதம் ரிப்போர்ட்டர். அதனால்தான் அந்த பத்திரிகைக்கு பேட்டி அளித்தேன். ஆனால் மீண்டும் தமது மஞ்சள் பத்திரிகை புத்தியை குமுதம் ரிப்போர்ட்டர் காண்பித்துவிட்டது என சில மணிநேரங்களாக தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார் குஷ்பு.

More News >>