நான் இன்னும் சில ஆண்டுகள்தான் உயிருடன் இருப்பேன்... வைகோ திடீர் கண்ணீர் பேச்சு

தாம் இன்னும் சில ஆண்டுகள்தான் உயிருடன் இருப்பேன் என திருச்சியில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் கண்ணீருடன் மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:

மகாத்மா காந்தியின் உருவபொம்மையை தீயிட்டு எரிக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டு முழக்கங்களை எழுப்புகிறார்கள். (கண்ணீர்)

நான் இன்னும் சில ஆண்டுகள்தான் உயிருடன் இருப்பேன். அதுவரை வாழும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன்.

இவ்வாறு வைகோ பேசினார்.

அவரது கண்ணீர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது ‘மவுனமாக’ நகர்ந்து சென்றார்.

More News >>