காஷ்மீரில் உயிரிழந்த வீரர்கள் உடல் டெல்லி வந்தது - பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் படை வீரர்களின் உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பாக்.ஆதரவு தீவிரவாதிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் வீர மரணமடைந்த 41 வீரர்களின் உடல்கள் சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மரணமடைந்த அனைவரின் உடல்களும் டெல்லி கொண்டு தனித்தனியாக அனுப்பப்பட உள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த வீரர்களின் உடலுக்கு பிரதமர் மோடி, முப்படைத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

More News >>