ட்வீட்டுக்கு நோட்டு கொடுப்பதாக திமுகவினர் மீது பொய்பிரசாரம்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ஓட்டுக்கே நோட்டு கொடுக்காத தாம் சமூக வலைதள பதிவுகளுக்காக பணம் கொடுப்பதாக திமுகவினர் மீது கூறப்படும் பொய் பிரசாரங்களில் எள் முனையளவும் உண்மை இல்லை என அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய நவீன தகவல் தொழில்நுட்பட உலகில் பொய்யான மின்னஞ்சல்கள், பொய்யான ட்வீட்டுகள், பொய்யான முகநூல் பதிவுகள் தயாரிப்பது சாத்தியமானது.

உள்நோக்கத்துடன் திட்டமிட்டு பரப்பப்படும் இப்பிரசாரங்களில் துளியளவும் உண்மை இல்லை. சமூக வலைதளங்களில் திமுகவினர் பணம் பெற்று பதிவிடுவதாக சொல்லப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளில் எள்முனையும் உண்மை இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

More News >>