எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை - பாமகவைத் தொடர்ந்து பாஜகவுடன் தொகுதி உடன்பாடு முடிவாகிறது!

அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை எக்ஸ்பிரஸ் வேகம் எடுத்துள்ளது. பாமகவுடன் தொகுதி உடன்பாடு முடிந்த நிலையில் பாஜகவுடனும் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை நட்சத்திர ஹோட்டலில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சு நடத்துகின்றனர். இதில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும் என்று தெரிகிறது.

தொடர்ந்து தேமுதிக நிர்வாகிகளுடனும் பியூஸ் கோயல் இன்றே பேச்சுவார்த்தை நடத்துகிறார். தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதும் இன்றே முடிவாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

More News >>