ராமதாஸுக்கு நாட்டைப் பற்றி கவலை இல்லை, பணத்தைப் பற்றித்தான் கவலை - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்திருப்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். ராமதாசுக்கு நாட்டைப் பற்றிய அக்கறை கிடையாது, பணத்தைப் பற்றித்தான் கவலை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடனான கூட்டணியை பாமக உறுதி செய்துவிட்டது. 7 மக்களவைத் தொகுதிகளுடன் ராஜ்யசபா சீட் ஒன்றையும் ஒப்பந்தம் செய்து உடன்பாடு கையெடுத்தாகியுள்ளது.

இந்த கூட்டணி உடன்பாடு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாமகவை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2009 மக்களவைத் தேர்தலிலேயே தோற்றுப் போன கூட்டணி தான் அதிமுக-பாமக கூட்டணி என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், ராமதாசுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை கிடையாது. நாட்டைப் பற்றிய அக்கறை இல்லாத ராமதாஸ், பணத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர் என்றும் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

More News >>