காதலனின் கரம் பிடித்த நடிகை பாவனா. இனிதே நடந்த டும் டும் டும்..

நடிகை பாவனாவுக்கும் கன்னட சினிமா தயாரிப்பாளரும், தொழிலதிபருமான நவீனுக்கும் இன்று திருச்சூரில் திருமணம் நடைபெற்றது. பாவனாவின் திருமண நிகழ்வில் பல்வேறு திரைப்பட நடிகர், நடிகைகள் கலந்துக் கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கேரளாவை சேர்ந்த பாவனா தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார். கன்னடப் படங்களில் நடித்தபோது கன்னடத் தயாரிப்பாளரும் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனை காதலித்தார். அவரகளுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நடிகை பாவனா கடத்தில் சம்பவம் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக திருமணத்தை தள்ளிப்போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று திருச்சூரில் திருமணம் நடைபெற்றது. இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

More News >>